Friday, 26 August 2011

விலக்கப்பட்ட கனி

இப்பொழுது முக்கியமாக விவாதிக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா , நீதிபதிகள் நியமனம், நீதித்துறையில் ஊழல் போன்ற விஷயங்களில் பாராளுமன்றம் , நீதித்துறைகளுக்கு இடையிலான அதிகார எல்லை, அதிகார பகிர்வு, மற்றும் உபயோகம் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள நெறிமுறைகள் மற்றும் விதிகளை அடிப்படையாக கொண்டுள்ளார்கள்.  நாடாளுமன்றம் மற்றும் நீதித்துரைகளுக்கிடையிலான அதிகார எல்லை மற்றும் அதிகார பகிர்வு குறித்து பேசும்பொழுது முக்கியமான ஒரு உண்மை மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது.  அரசாங்கத்திலோ அல்லது நீதித்துரையிலோ தவறுகள் நடப்பது தெரிய வரும்பொழுது அதனை தெரிந்துகொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் ஏற்ற உரிமை இறுப்பதுபோலவே இந்த அமைப்புகளுக்கும் உண்டு.  நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் உரிய அதிகாரங்களை தங்களுக்கு சொந்தமானதாகவும் அதன் நெறிமுறைகளை தேவைக்கு அப்பால் தங்கள் ஆதாயத்திற்கேற்ப வியாக்கியானமளிப்பதும் ஆதிக்க அதிகார இச்சையுடைய சிந்தனையே ஆகும். அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரங்களை அதில் கூறப்பட்டுள்ள நெரிமுரைகளைக்கொண்டு எவ்வாறு உபயோகிப்பது என்ற தெளிவின்றி உரிமை மீறல் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் என்று குறை கூறுவதும் தங்களுக்கென்று தனிப்பட்ட அதிகார எல்லைக்கூட்டை தேடிக்கொள்வதும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும்.

Monday, 1 August 2011

இந்துக்கள் ஆரியர்களா?

பிராம்மணர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் தொகையில் தனியொரு பிரிவினராக என்னப்படுவதர்க்கான  சாத்தியகூறுகளே அதிகம் உள்ளன. பிராம்மணர்கள் தங்களுக்கென்று தனியானதொரு கலாச்சாரமும் அடையாளமும் கொண்டிருப்பதால் மத்திய ஆசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் உள்ள முஸ்லிம் மக்களும் ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ யூத இன மக்களும் வடக்கு ஆசியாவில் உள்ள மங்கோல் மக்களும் அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களே என்று அடையாளம் கொள்ளமுடியாத நிலைமையே யதார்த்தமாய் உள்ளது. பிராம்மணர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல என்னும் கருத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்ப்போமானால் அவர்கள் இந்தியா முழுவதும் தங்கள் மதத்தை ஸ்தாபனம் செய்து ஆட்சி அதிகாரங்களையும் இன்ன பிற உரிமைகளையும் சுயபோகமாய் அனுபவித்து வருவது தெரியும். ஆனால் இந்து மதத்தின் கொள்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு உகந்தன அல்லவென்பது ஆராய்ச்சிக்குரியதொரு விஷயமாகும். பிரம்மச்சரியமும் முக்தியும் இந்து மதத்தின் பிரதான கொள்கைகலேன்ற  நோக்கில் பார்த்தால் பிராம்மணர்கள் அனைவரும் பிரம்மச்ச்சரிகளில்லைஎன்பதும் வேத காலத்திலிருந்தே அவர்கள் சம்சாரத்தில் ஈடுபட்டு குல விருத்தி செய்தார்களென்பதை  புரிந்து கொள்ள முடியும். ஆதிசங்கரர் தான் முதன் முதலாய் முழு பிரம்மச்சரியத்தில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவரது மடத்திற்கு முக்கியத்துவமும் பெருமையும் வழங்கப்பட்டு வருகிறது. மதத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தீமைகளை எதிர்த்து போராட வேண்டுமெனில் அவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை தள்ளிவைக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த காரணத்தினாலேயே பெரியார் அவர்கள் துவக்கிய சுயமரியாதை இயக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டு திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தது. இன்று இந்தியாவின் சமுதாய , அரசியல், பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவும் இந்திய துணைகண்டம் என்னும் பூகோள ரீதியாகவும் தீர்வு காண்பதே விஞ்ஞானபூர்வமானதாகும்  

கானகத்து நீதி

பெரியார் அவர்கள் தாம் செய்து வந்த சமூகப்பணியை பற்றி குறிப்பிடும்பொழுது மத போதகர்களால் உருவாக்கப்பட்ட வர்ண பேதங்களையும் அதனை தொடர்ந்த ஜாதி கொடுமைகளையும் சமூக கட்டுப்பாடுகளையும்  எதிர்த்து போராடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தினாலும்,  அதைப்பற்றிய அக்கறையும், தன்மான உணர்வும் யாருக்கும் இல்லாததாலும்  தாமே முன்வந்து அந்தப்பணியை  செய்து வருவதாக குறிப்பிட்டார் . இன்றும் அதே போன்றதொரு நிலமையே இந்தியா முழுவதும் நிலவி வருவதை நாம் காணலாம். இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையையும் பொறுப்பையும் மறந்து, தேசத்தையும் ,மக்களையும் புறக்கணித்துவிட்டு  சுய முன்னேற்றம் ஒன்றே உலகில் சாதனைக்குரிய விஷயம் என்று நினைத்து செயல்பட்டு வருவது கானகத்து நீதியே என்று நம்மை எண்ணவைக்கிறது.