Tuesday, 28 August 2012

Those who don't see, hear, speak, do despite having the corresponding limbs.

     விக்கிரக ஆராதனையையும், வழிபாட்டையும் கண்டித்து மறுக்கும் வேதாகமம் விக்கிரக வழிபாட்டை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது, செவிகளிருந்தும் கேட்காது, வாயிருந்தும் பேசாது, கைகளிருந்தும் எதுவும் செய்யாது, அதனை வழிபடுவோரும், நம்புவோரும்  அவற்றை போன்றே உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. அதுவே சற்று மாறுதலுடன் விக்கிரகங்கள் கற்களால் செய்யப்பட்டவைகள் ஆகையால் அவற்றை வழிபடுவோரும், நம்புவோரும் அவைகளை போன்றே உணர்ச்சியற்றவர்களாயும், இரக்கமற்றவர்களாயும்  இருப்பதாக பரவலாக கையாளப்படுகிறது. அது ஒன்றும் பிரதான விழயமல்ல.

 வேதாகமத்தை கடைபிடிக்கிறவர்களாயினும், விக்கிரக வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாயினும் வாழ்க்கையில் தமது பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் மட்டுமே தமது லட்சியமாகவும், இலக்காகவும் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது பொறுப்புகளையும், கடமையும் மறந்து சமுதாயமும், உலகமும் பன்முகத்தன்மை (புலூரளிசம்) கொண்டது ஆகையால் எந்த ஒரு பிரச்சினையாயினும் இயற்கையாகவோ அல்லது தாமே (அவர்களே) முயன்று தீர்த்து கொள்ளவேன்றுமென்றிருப்பவர்கள் அனைவரும் அத்தகைய விக்கிரகங்களை போன்று அங்கங்களிருந்தும் செயல் படாதவர்கலும், இரக்கம் கொள்ளாமல் இருப்பவர்களும் ஆவார்கள்.

Ups and Downs

     வாழ்வின் ஏற்றங்களும், இறக்கங்களும் 

              மனித வாழ்க்கை ஏராளமான ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததொரு நீண்ட மலைப்பாதை போன்றதாகும். வாழ்வில் ஏற்றம் அடையும் பொழுது பெருமிதம் கொள்ளாமலும், தாழ்வடையும் பொழுது தன்னிலை இழக்காமலும் இருக்க வேண்டியது அவசியமானது என்பதே இந்த தத்துவம் போதிக்கும் பாடமாகும். இந்த அறிவுரைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் தமது நெடிய அரசியல் வாழ்க்கையில் பலமுறை முதலமைச்சராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் ஆவார் . 
             மிகச்சிறந்ததொரு அரசியல்வாதியாகவும், பொதுநல தொண்டராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் தம்மை சாமான்யமானதொரு அரசியல்வாதியாக வெளிப்படுத்திக்கொண்டது இரண்டாவது முறை தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த பொழுது புதுடில்லியில் முகாமிட்டு தமது குடும்பத்தாருக்கும், கட்சிக்காரர்களுக்கும் மந்திரி பதவிக்காக பேரம் பேசிய போதாகும் .  அதுவே அவரது வாழ்க்கையில் அடைந்த மிக தாழ்வான நிலை என்று இப்பொழுது டெசோ மாநாட்டை கூட்டியமைக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை சந்திக்கும் பொழுது குறிப்பிடவேண்டியுள்ளது.