Tuesday, 28 August 2012

Ups and Downs

     வாழ்வின் ஏற்றங்களும், இறக்கங்களும் 

              மனித வாழ்க்கை ஏராளமான ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததொரு நீண்ட மலைப்பாதை போன்றதாகும். வாழ்வில் ஏற்றம் அடையும் பொழுது பெருமிதம் கொள்ளாமலும், தாழ்வடையும் பொழுது தன்னிலை இழக்காமலும் இருக்க வேண்டியது அவசியமானது என்பதே இந்த தத்துவம் போதிக்கும் பாடமாகும். இந்த அறிவுரைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் தமது நெடிய அரசியல் வாழ்க்கையில் பலமுறை முதலமைச்சராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் ஆவார் . 
             மிகச்சிறந்ததொரு அரசியல்வாதியாகவும், பொதுநல தொண்டராகவும் இருந்து வரும் திரு. கருணாநிதி அவர்கள் தம்மை சாமான்யமானதொரு அரசியல்வாதியாக வெளிப்படுத்திக்கொண்டது இரண்டாவது முறை தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த பொழுது புதுடில்லியில் முகாமிட்டு தமது குடும்பத்தாருக்கும், கட்சிக்காரர்களுக்கும் மந்திரி பதவிக்காக பேரம் பேசிய போதாகும் .  அதுவே அவரது வாழ்க்கையில் அடைந்த மிக தாழ்வான நிலை என்று இப்பொழுது டெசோ மாநாட்டை கூட்டியமைக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை சந்திக்கும் பொழுது குறிப்பிடவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment