தகவலறியும் உரிமை சட்டம் , அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய சட்டங்களை தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஒன்றை பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் கொண்டு வர உத்தேசித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . ஏற்கெனவே பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள லட்சக்கணக்கான டன் உணவுபொருட்கள் மக்கிபோய் உணவுபொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளின் ஆன்மாவையும் பசிக்கு உணவில்லாத ஏழை மக்களின் மனசாட்சியையும் துன்புறுத்தும் விதமாக நடந்து கொண்டு வருவது அனைவரும் நன்கறிந்த விஷயமாகும் . எந்த சட்டமானாலும், திட்டமானாலும் மக்களுக்கு பயனுறும் வண்ணம் மக்களை சென்றடைய வேண்டியதே இப்போதைய தேவையாகும்.
No comments:
Post a Comment